இந்தியாவுடன் மோதல்: கனடா வாழ் தமிழர்கள் நிலை குறித்து தமிழ்நாடு அரசு நாளை ஆலோசனை!
சென்னை: இந்தியாவுடன் மோதல் போக்கை கனடா அரசு கடைபிடித்து வரும் நிலையில் அங்கு வாழும் தமிழர்கள் நிலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலிஸ்தான் எனும் இந்தியாவில் சீக்கியர் தனிநாடு கோரும் அமைப்புகளில் ஒன்றின் தலைவரான நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நிஜ்ஜாருக்கு அந்நாட்டு குடியுரிமை கொடுத்தது.

கனடா குடியுரிமை பெற்ற நிஜ்ஜாரை இந்தியா ஏஜென்சிகள்தான் படுகொலை செய்தது என்பது அந்நாட்டின் பகிரங்க குற்றச்சாட்டு. இதனால் இரு நாடுகளிடையேயான உறவு முறியும் நிலை உருவாகி உள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேற்றப்பட்டார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து நாட்டில் இருந்து கனேடிய தூதரக மூத்த அதிகாரியை வெளியேற்றியது.
மேலும் கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசும், கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அத்துடன் கனடா நாட்டவருக்கான விசா சேவைகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
காலிஸ்தான் பின்னணி என்ன?: இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக 1980கள் முதல் 1990கள் வரை ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 1990களில் காலிஸ்தான் இயக்கம் அழிக்கப்பட்டது.
இதனையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கும் போய் காலிஸ்தான் தனிநாட்டுக்கான இயக்கங்களை இந்த பயங்கரவாதிகள் நடத்தினர். இப்படியான இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் புலிப் படை. இதன தலைவரான நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதால் தற்போது இந்தியா- கனடா இடையே மோதல் வெடித்துள்ளது. கனடா, இந்தியா நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகள் தற்போது நமது நாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications