'சர்வாதிகாரம் தமிழகத்தில் நடக்காது..முதல்வர் ஸ்டாலின் விட மாட்டார்'.. பாஜகவை கடுமையாக சாடிய அமைச்சர்
சென்னை: சமூக நீதி மற்றும் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்து வருவதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து வருவதாக அவர் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பாஜக வைக்கும் குற்றச்சாட்டு
விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படடு வருகிறது.

சக மாணவிகள் மறுப்பு
இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் மாணவியின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவியை யாரும் மதமாற்றம் செய்யும்படி கட்டாயபடுத்தவில்லை என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தது. ''எங்களை யாரும் மதமாற்றம் செய்யும்படி கட்டாயபடுத்தியதில்லை'' என்று பள்ளியில் படிக்கும் மாணவிகளும் கூறினார்கள்.

திமுக-பாஜக வார்த்தைபோர்
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே வார்த்தைபோர் நடந்து வருகிறது. மாணவி இறப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நடடிக்கை சரியில்லை என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை கோரி வருகிறார். தமிழகத்தில் பாஜக மதபிரச்சினையை தூண்ட நினைப்பதாகவும் அவர்ளின் கனவு ஒருபோதும் நடக்காது என்றும் தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாகூரில் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மதமாற்ற சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறினார்.
Recommended Video

ஸ்டாலின் துணிந்து நிற்கிறார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழகத்தில் மத பிரச்சினையை உருவாக்கும் சிலரின் வேலை இங்கு நடக்காது. சர்வாதிகாரத்தை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் துணிந்து நிற்கிறார். சமூக நீதி மற்றும் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார்' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications