Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல்

சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 நாள் ஆகியும் இன்னும் சின்னதம்பியை பிடிக்க முடியவில்லை. அதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சி மேற்கொள்ள போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னதம்பி முகாமிட்டுள்ளான். அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வருகிறான்.

சின்னதம்பியை பிடிக்க 2 கும்கிகளை அனுப்பினால் ஒன்றும் வேலைக்காகவில்லை. கூடவே விளையாடி, சாப்பிட்டு, கொஞ்சியதுதான் மிச்சம்.

தொடர்ந்து கண்காணிப்பு

தொடர்ந்து கண்காணிப்பு

கோர்ட்டும் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டது. எனினும் சின்னதம்பியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்டோர் சின்னதம்பியின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

 உடுமலை ராதாகிருஷ்ணன்

உடுமலை ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். யானை முகாமிட்ட இடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து சின்னத்தம்பி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பேசி வருகிறார்.

மயக்க ஊசி

மயக்க ஊசி

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "சின்னத்தம்பி யானையை பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி போட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறை அனுமதி கேட்டுள்ளோம் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம்" என்றார்.

சமவெளிக்கு வரும்

சமவெளிக்கு வரும்

தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி, யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து இன்று ஆய்வு செய்தார். அப்போது சின்னதம்பி திரும்பவும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்றும், காட்டுக்குள் விட்டாலும் திரும்பவும் சமவெளிப்பகுதிக்கே வந்துவிடும் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி

பொதுமக்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் மயக்க ஊசி போட்டு சின்னதம்பியை பிடித்து கொண்டு போய் வனத்தில் விட்டால் என்ன ஆகும் என தெரியவில்லை. எனினும், இதுவரை மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் தராமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் சின்னதம்பிக்கு மறுபடியும் மயக்க ஊசியா என்று பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+