மயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல்
சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை: 6 நாள் ஆகியும் இன்னும் சின்னதம்பியை பிடிக்க முடியவில்லை. அதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சி மேற்கொள்ள போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னதம்பி முகாமிட்டுள்ளான். அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வருகிறான்.
சின்னதம்பியை பிடிக்க 2 கும்கிகளை அனுப்பினால் ஒன்றும் வேலைக்காகவில்லை. கூடவே விளையாடி, சாப்பிட்டு, கொஞ்சியதுதான் மிச்சம்.

தொடர்ந்து கண்காணிப்பு
கோர்ட்டும் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டது. எனினும் சின்னதம்பியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்டோர் சின்னதம்பியின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில், உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். யானை முகாமிட்ட இடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து சின்னத்தம்பி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பேசி வருகிறார்.

மயக்க ஊசி
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "சின்னத்தம்பி யானையை பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி போட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறை அனுமதி கேட்டுள்ளோம் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம்" என்றார்.

சமவெளிக்கு வரும்
தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி, யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து இன்று ஆய்வு செய்தார். அப்போது சின்னதம்பி திரும்பவும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்றும், காட்டுக்குள் விட்டாலும் திரும்பவும் சமவெளிப்பகுதிக்கே வந்துவிடும் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் மயக்க ஊசி போட்டு சின்னதம்பியை பிடித்து கொண்டு போய் வனத்தில் விட்டால் என்ன ஆகும் என தெரியவில்லை. எனினும், இதுவரை மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் தராமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் சின்னதம்பிக்கு மறுபடியும் மயக்க ஊசியா என்று பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications