மயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல்
சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை: 6 நாள் ஆகியும் இன்னும் சின்னதம்பியை பிடிக்க முடியவில்லை. அதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சி மேற்கொள்ள போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னதம்பி முகாமிட்டுள்ளான். அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வருகிறான்.
சின்னதம்பியை பிடிக்க 2 கும்கிகளை அனுப்பினால் ஒன்றும் வேலைக்காகவில்லை. கூடவே விளையாடி, சாப்பிட்டு, கொஞ்சியதுதான் மிச்சம்.

தொடர்ந்து கண்காணிப்பு
கோர்ட்டும் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டது. எனினும் சின்னதம்பியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்டோர் சின்னதம்பியின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில், உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். யானை முகாமிட்ட இடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து சின்னத்தம்பி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பேசி வருகிறார்.

மயக்க ஊசி
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "சின்னத்தம்பி யானையை பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி போட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறை அனுமதி கேட்டுள்ளோம் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம்" என்றார்.

சமவெளிக்கு வரும்
தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி, யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து இன்று ஆய்வு செய்தார். அப்போது சின்னதம்பி திரும்பவும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்றும், காட்டுக்குள் விட்டாலும் திரும்பவும் சமவெளிப்பகுதிக்கே வந்துவிடும் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் மயக்க ஊசி போட்டு சின்னதம்பியை பிடித்து கொண்டு போய் வனத்தில் விட்டால் என்ன ஆகும் என தெரியவில்லை. எனினும், இதுவரை மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் தராமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் சின்னதம்பிக்கு மறுபடியும் மயக்க ஊசியா என்று பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications