பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. எப்படி பார்க்கலாம்? முழு விவரம்
சென்னை: கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெற்ற பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்கையில் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜூலை 28, 29-ஆம் தேதி (திங்கள், செவ்வாய்) பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 5.275.
புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் நாள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications