தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

தமிழகத்தில் இன்று 55,710 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 540 பேருக்கு கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,53,86,025 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,35,280 ஆகும்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் இன்று 627 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 8,18,147.
கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 4 பேர் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,320 ஆகும்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,813. மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் 157 பேருக்கும் கோவையில் 56 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.












Click it and Unblock the Notifications