எஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்
தமிழக வரலாற்றில் முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பத்தாம் வகுப்பு தேர்வு வரலாற்றில் முதன்முறையாக தேர்வுகள் வரலாற்றில் மாணவிகளை முந்தியுள்ளன
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, முதன்முறையாக மாணவிகளை விட அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியானது. காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 9,39,829 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 4,68,070 மாணவர்கள், 4,71,759 மாணவிகள் மற்றும் 6,235 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த ஆண்டு 100 சதவிகித தேர்ச்சி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications