‛‛இனி பணி இடமாறுதல் ஈஸி’’.. ஆசிரியர்களுக்கான நிபந்தனை அதிரடி நீக்கம்! விண்ணப்ப தேதியை நீட்டித்த அரசு
சென்னை: தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி மே 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதோடு கலந்தாய்வில் விண்ணப்பிக்க தற்போது வேலை செய்யும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பள்ளி கல்வித்துறை தளர்த்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் இடமாறுதல் தொடர்பான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. பணி இடமாறுதலை விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்து இதில் பங்கேற்கலாம்.

அந்த வகையில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணி புரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பொது மாறுதலில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதோடு, முக்கிய நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில் ஆணை பெறப்பட்டது. அதோடு கலந்தாய்வுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி உத்தேச காலஅட்டவணையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க 13.05.2024 முதல் 17.05.2024 முடிய கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS Website) பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது 2024-2025ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம் இடைநிலை ஆசிரியர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதை காண முடிகிறது. இடையில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும்பாது கல்வி தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட்டிருந்தது.
இதனால் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து 25.05.2024 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கலாகிறது. மேற்காண் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையினையை கடைப்பிடிக்க தேவையில்லை'' என கூறப்பட்டுள்ளது.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications