கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசு.. கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

அதிகார குவியலை நோக்கி ஒற்றை ஆட்சிமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்றும், அதற்கு தமிழக அரசு துணை போவதாகவும் புகார் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் பொதுவிநியோக கட்டமைப்பை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு ஆதரவளித்திருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் எனக் கூறியுள்ளார்.
மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒடுக்குவதற்கு பிரதமர் மோடி மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருவதாகவும், இதற்கு அதிமுக அரசு ஒத்துப்போவது கண்டனத்திற்குரியது என சாடியுள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் இருந்து தமிழக அரசு விலக வேண்டும் என்றும், அவ்வாறு விலக துணிவில்லாமல் கூட்டாட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கே.எஸ்.அழகிரி எச்சரித்திருக்கிறார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications