தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான... தர வரிசைப் பட்டியல் வெளியீடு!!
சென்னை: தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முன்னரே உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்கள் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 523க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் வழங்கப்படும் இடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணபித்து இருந்தனர்.
இதற்கான, சமவாய்ப்பு எண், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு இருந்தனர்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்து இருந்தார். ஆனால், அன்று வெளியாகவில்லை. இன்று (செப்டம்பர் 28ஆம் தேதி) மாலை வெளியாகும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இருக்கும் 458 கல்லூரிகளில் 1,61,877 இடங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. 11.1லட்சம் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications