இன்று கோடைக்கு இணையாக வெயில் கொளுத்தும்! 4 டிகிரி வரை உயருமாம்.. எந்த ஊர்களில் ரொம்ப மோசம்!
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்காத நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகப் பல வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருவதால் அங்கே விளைச்சலும் பாதிக்கப்பட்டு காய்கறி விலையும் கூட உயர்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு நேர்மாறான வானிலையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை எங்கும் பெரிதாகப் பெய்யவில்லை. அதிலும் குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களாக வெப்பமான வானிலையே நிலவி வருகிறது.

வானிலை: இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 1 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 6 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை இன்று 01.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்பம் மோசம்: தமிழ்நாட்டில் நேற்று கோடை காலத்தில் இருந்ததை போலவே கடுமையான வெப்பம் நிலவி வந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. பல நாட்களுக்குப் பிறகு இத்தனை மாநிலங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அடுத்து தூத்துக்குடி, ஈரோடு பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பம் சதமடித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எங்கும் பெரியளவில் மழை பெய்யவில்லை.. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தேவாலா, கூடலூர் பஜார், பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதிகளில் 10 மிமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 1 கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்











Click it and Unblock the Notifications