சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வியர்க்கும் "வேலூர்".. சுட்டெரிக்கும் சூரியன்..2 நாளைக்கு வெயில் வாட்ட போகிறதாம்.. எங்கேன்னு பாருங்க

இன்றும் நாளையும் வெயில் அதிகம் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிய நிலையில், இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது...

மக்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. வீட்டிற்குள்ளேயே அனல் கொட்டி வருகிறது.. சாலைகளில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

தஞ்சையை அடுத்து நாகை.. மீண்டும் ஒடு தேர் விபத்து..! சக்கரத்தில் சிக்கி அலறி துடித்த தொழிலாளி பலி..! தஞ்சையை அடுத்து நாகை.. மீண்டும் ஒடு தேர் விபத்து..! சக்கரத்தில் சிக்கி அலறி துடித்த தொழிலாளி பலி..!

வெயில்

வெயில்

அதுவும், மார்ச் மாதம் அடித்த வெயிலை பார்த்து தமிழக மக்கள் தலைசுற்றி போய்விட்டார்கள். இப்பவே இவ்வளவு வெயில் என்றால், மே மாதம் எப்படி இருக்க போகிறதோ என்ற கவலையும் சேர்ந்தே அதிகரித்தது.. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகிவிட்டது.. எனினும், தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை

மழை

மழை

அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவியது... ஆனால், மறுபடியும் வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது.. நேற்று மட்டும் 10 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதில் பீதியை கிளப்பிய மாவட்டம் வேலூர்தான்.. அதிகபட்சமாக 106.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டி வெயில், மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

வேலூர்

வேலூர்

அதாவது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 41.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. கரூர்பரமத்தி, திருச்சி, திருத்தணியில் 105 டிகிரியும், ஈரோடு, சேலத்தில் 103 டிகிரியும், தருமபுரியில் 102 டிகிரியும், மதுரை, தஞ்சையில் 101 டிகிரியும் பதிவாகி வெப்பம் உள்ளது..

Recommended Video

    அடுத்த ஐந்து நாட்களுக்கு... இந்த பகுதிகளில் எல்லாம் மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்!
    பாளையங்கோட்டை

    பாளையங்கோட்டை

    சென்னை சென்னை, பாளையங்கோட்டை 99 டிகிரியும், நாமக்கல்லில் 98 டிகிரியும் நேற்று பதிவானது.. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் வெப்பநிலை உயரும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்குக்கூடும் என்று ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    today and tomorrow temperature will rise in all districts, warns Meteorological Center இன்றும் நாளையும் வெயில் அதிகம் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X