கடைசி நாள்.. என்ன நடக்கும்? இன்றுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவை
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இன்று நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வுகள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
காவிரி நதி நீர் விவகாரம், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக வலுவடைந்து வரும் போராட்டங்கள் என பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடியது. வழக்கம்போல் மறைந்த எம்.எல்.ஏக்கள், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்ட பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அதை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது காரசார விவாதம் நடைபெற்றது. அதேபோல், நேற்றைய நிகழ்வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்கள். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள், கோரிக்கைகளை எழுப்ப உள்ளார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார்கள்.
அதன் பின்னர் நிகழ் நிதியாண்டிற்கான துணை மதிப்பீடு நிறைவேற்றப்பட இருக்கின்றன. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் மண்டல திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான இயக்க ஊர்திகள் சட்ட மசோதாவையும் தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் வாயிலாக நிறைவேற்றப்பட உள்ளன. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் திட்டமிட்டப்படி நிறைவடைந்தால், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications