சென்னை அருகே புதிய விமான நிலையம்.. "இந்த" இரண்டில் ஒரு இடம்! எங்கு அமைகிறது ?
சென்னை: சென்னை அருகே புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
சென்னையில் விமான பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தாமதம்
இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த இரு இடங்களில் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என கருதினர்.

மத்திய விமான போக்குவரத்து
இதையடுத்து அதுகுறித்த அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. மேலும் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தமிழக தொழில் துறையிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்துகிறார். இதன் முடிவில் எந்த புதிய விமான நிலையம் அமைய போகும் இடம் இன்று இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

40 ஆயிரம் கோடி முதலீடு
சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் என்பது ரூ 40 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைகிறது. விமான நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பாக கடந்த மாதம் 16 ஆம் தேதி அமைச்சர் சிந்தியா தலைமையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில் 2024 ஆம் ஆண்டு வாக்கில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.

வேலைவாய்ப்பு
இது பிரதமரின் கனவு. இதை நான் நனவாக்க வேண்டும் என்றார். புதிய விமான நிலைய திட்டத்திற்கு 51 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த விமான நிலையத்தில் 8 சர்வதேச முனையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த விமான நிலையம் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications