சென்னை, கோவையில் ஒரே நாளில் தலைகீழாக மாறிய தக்காளி விலை.. வியாபாரிகளையே வியக்க வைத்த மாற்றம்
சென்னை: பொதுவாகவே தக்காளி என்பது மழை அதிகம் பெய்யும் போது வரத்து குறையும். தமிழ்நாட்டில் தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, ஒசூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் பெருமளவு குறைந்துவிட்டது. அதேபோல் தக்காளி அதிகம் விலையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கும் வரத்து குறைத்துவிட்டது. இதனால் தக்காளி விலை 40 ரூபாயில் இருந்து 80 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை நான்கு நாள் முன்பு வாங்கியிருந்தால் 30 ரூபாய், 40ரூபாய்க்கு தான் விற்பனையானது.ஆனால் இன்று தக்காளி விலை ஆப்பிள் போல் ஏறியிருக்கிறது. மழைப்பொழிவு அதிகரித்த காரணத்தால் தக்காளி வரத்து தமிழ்நாடு முழுவதுமே குறைந்துவிட்டது. குறிப்பாக தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, ஒசூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் குறைவாக உள்ளது. இதன்காரணமாகவும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சென்னையை பொறுத்தவரை தினந்தோறும் 1,300 டன் தக்காளி தேவையாகும். ஆனால், தற்போது 600 டன் தக்காளி மட்டுமே வருகிறது. அதிலும், முதல் ரக தக்காளி 400 டன் மட்டுமே வருவதால் கிராக்கி அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனையான நிலையில், வரத்து குறைவு காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்தது. தற்போது ஒரு கிலோ 80 ரூபாய் ஆக விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை குறையும்போது வரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் போல் கோவை, ஈரோடு உள்பட பல்வேறு நகரங்களிலும் தக்காளி விலை 80 ரூபாயை தாண்டிவிட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது.
கோவை மார்க்கெட்டுகளுக்கு 100 டன் தக்காளி வந்த நிலையில்,. தற்போது 40 டன் முதல் 50 டன் வரையே தக்காளி வருகிறதாம். மேலும் கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டதாம். இது ஒருபுறம் எனில், கோவை வந்து ஏராளமான கேரள வியாபாரிகள் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வதால் கிராக்கி அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளதாக கோவை காய்கறி வியாபாரிகள் கூறினார்கள்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications