அப்பாடா.. சொல்லீட்டாங்கப்பா.. நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு.. கனமழையால் அறிவிப்பு
சென்னை: சென்னையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக விடுமுறையை மறுத்த அவர் பின்னர் விடுமுறை அறிவிப்பினை முறைப்படி வெளியிட்டார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்வேறு பகுதிகளில் இடைவிடாது அதீத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

சென்னை மாநகரில் நேற்று இரவு தொடஙகி இன்று காலை வரை மழை பெய்த நிலையில் , இன்று மாலையும் நல்ல மழை பெய்தது.இப்போது பல இடங்களி மழை விட்டு விட்டு கொட்டி வருகிறது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை முதலில் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி மறுத்துள்ளார். சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications