நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… வள்ளுவர் கோட்டத்தில் பொம்மை குடோன் எரிந்து நாசம்
சென்னை: நுங்கம்பாக்கம் அடுத்த வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
5 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து, முதல்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த தொழிற்சாலை கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகள் இருந்ததால், அங்கே வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீ விபத்து காரணமாக வள்ளுவர் கோட்டம் பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது.
பொம்மை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications