திருச்சி - சென்னைக்கு நாளை முதல் 2 விமானங்கள்தான்! இண்டிகோ அறிவிப்பு! ஏர்பஸ் விமானங்களை இயக்க முடிவு
சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் 2 விமானங்கள்தான் இயக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 6 சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 2 சேவைகளாக குறைக்கப்பட்டதோடு, அதற்கு பதிலாக ஏர்பஸ் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் ஏர்பஸ் விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்பஸ் விமானத்தில் 180 பயணிகள் பயணிக்க முடியும். திருச்சியில் இருந்து காலை 7.35 முதல் இரவு 10.15 மணி வரை 6 இண்டிகோ விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் புதிய விதிகளை உரிய முறையில் பின்பற்றாததால், போதிய விமானிகள் இல்லாமல் 10 நாட்களுக்கும் மேலாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையை சமாளிக்கும் வகையில், இண்டிகோவின் 10 சதவீத விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் 31 ஆம் தேதி வரை தற்போது உள்ள 6 சேவைகள் இரண்டாக குறைத்து இயக்கப்படும் என்றும் அதற்கு ஈடாக 2 ஏர்பஸ் விமானங்களை இயக்கவும் இண்டிகோ முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications