ரெண்டு நாள் வாலை சுருட்டி பம்மிய திருச்சி சாதனா.. இன்று எரிமலையாக வெடித்து வீடியோ.. ச்சீ என்ன இது?
சென்னை: போலீஸ் சம்மன் கொடுத்தனுப்பியதும் பம்மிக் கொண்டு இழுத்து போர்த்தி கொண்டு கையெடுத்து கும்பிட்ட திருச்சி சாதனா மீண்டும் பழைய படி தன் வேலையை காட்ட தொடங்கிவிட்டார்.
திருச்சி சாதனா- டிக் டாக் எனும் ஆப் மூலம் தனது நடிப்பு, நடனம் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இதனால் சப்ஸ்கிரைபர்கள் கொஞ்சம் குறைவாகவே இருந்தனர். ஆனாலும் அவருக்கு அந்த வீடியோ மூலம் வருமானம் வந்து கொண்டுதான் இருந்தது.
அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!
ஆனாலும் ஆசை யாரை விட்டது. அதனால் ஆபாசத்தை தனது நடனங்களில் புகுத்தினார். ஆபாச உடை, ஆபாச சப்தங்கள், ஆபாச அசைவுகள் மூலம் அதிக சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்தனர்.
டிக்டாக்
இதனால் டிக்டாக் தடை செய்யப்பட்டதும் யூடியூப்பில் போட்டிகள் அதிகமானதால் லைவில் ஆபாசமாக உட்கார்ந்து பேசுவது, இரட்டை அர்த்த சங்கேதங்களை செய்வது, இவ்வளவு ஏன் கதவை மூடிவிட்டு புடவையை லைவில் மாற்றினார். அதாவது ஊருக்கே இவர் புடவை கட்டுவதை காட்டிவிட்டு கதவை மட்டும் தாழிட்டுள்ளார்.
திருச்சி சாதனா
இப்படியாக திருச்சி சாதனாவின் ஆபாசங்கள் அத்துமீறி கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் குளிக்கும் வீடியோவையும் திருச்சி சாதனா வெளியிட்டார். இந்த நிலையில்தான் இவரது கிராமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் ஆபாச வீடியோக்களை வெளியிடும் திருச்சி சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போலீஸில் சம்மன்
இதையடுத்து சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீஸார், எச்சரிக்கை கலந்த அறிவுரைகளை வழங்கினர். இந்த விசாரணைக்கு பிறகு ஒரு வீடியோவை வெளியிட்ட திருச்சி சாதனா பார்க்கும் போது அனைவருக்கும் அதிர்ச்சி. இழுத்து போர்த்திக் கொண்டு முகத்தில் செம பீதியுடன் வாய் குழறியது.. இருந்தும் இனி நான் ஆபாசமாக வீடியோ போட மாட்டேன்.
மனநிலை பாதிப்பு
என் மீது கொடுத்த புகாரால் என் மனநிலையே பாதித்துள்ளது. இனி கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என இருப்பதாகவும் என் வீடியோக்களை டெலிட் செய்து விடுங்கள் என்றும் கையெடுத்து கும்பிட்டார். மேலும் இனி காமெடியாக, சோகமாக மட்டுமே வீடியோ போடுவேன், இல்லாவிட்டால் அதையும் கூட போடாமல் இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆபாசம்
வீடியோவை திறந்தாலே ஆபாசம், வாயை திறந்தாலே பச்சை பச்சை வார்த்தை... என பார்த்து பழகப்பட்ட நெட்டிசன்கள் அவர் போட்ட சோக வீடியோவை வைத்து ஓட்டினர். என்ன போலீஸ் ஸ்டேஷனில் நல்ல கவனிப்பா என்றெல்லாம் கேட்டு கமென்ட் போட்டிருந்தனர். ஏதோ பேருந்தில் பயணம் செய்யும் போது சோக பாட்டை வீடியோவாக போட்டிருந்தார்.
குளிர் விட்டு போச்சு
இதனால் நெட்டிசன்கள் என்ன சாதனா என்னா ஆட்டம் போட்டே!, இப்போ பார்த்தியா என கிண்டல் செய்தனர். இந்த நிலையில் நேற்று ஒரு வீடியோவை போட்டுள்ளார். அதில் ஆபாசமாக படுத்துக் கொண்டு ஜிபி முத்துவை அசிங்கமாக பேசி, "உன் கூட எதற்காக இரு பையன்களை வச்சிருக்கே" என்றெல்லாம் ஆபாச பொருள்படக் கூடிய கேள்வியை கேட்டுள்ளார். இதனால் என்ன சாதனா பயம் விட்டு போச்சா என கேட்டுள்ளார்.