"அண்ணாமலை கருத்தை தனிப்பட்ட கருத்தென கூற நீங்கள் யார்?" நயினார் நாகேந்திரனுக்கு சூர்யா சிவா கேள்வி!
நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறுவதற்கு நீங்கள் யார் என நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகியான திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு?
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டு வரும் ட்விட்டர் கருத்துகள், அண்ணாமலை பேசிய கருத்துகளை உறுதிபடுத்தியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் கருத்து
இதனிடையே பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது அவரின் சொந்த கருத்து என்று அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணி நிலைப்பாட்டை தேசிய தலைமையே முடிவு செய்யும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம் என்று தெரிவித்தார்.

திருச்சி சூர்யா பதிலடி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை அவரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகியும், அண்ணாமலை ஆதரவாளருமான திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.

தலைவர் பதவி மீது ஆசை
அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து அவரது சொந்த கருத்து என்று பேசுவதற்கு நீங்கள் யார்? திமுக அமைச்சர்களிடம் காரியத்திற்காக நிற்கும் நயினார் நாகேந்திரன் அண்ணாமலைக்கு மரியாதை கொடுக்கவில்லை. தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு நயினார் நாகேந்திரன் செய்யும் செயல் ஊரறிந்தது என்று கூறியுள்ள திருச்சி சூர்யா, முக்குலத்தோர் எதிர்ப்பை அண்ணாமலைக்கு எதிராக உருவாக்க முயற்சிக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்.
-
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர












Click it and Unblock the Notifications