முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கையோடு, கொளத்தூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
விஜய், சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

நேற்று, பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் அப்படியே பரப்புரையை தொடங்கினார். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலும் அவர் பரப்புரை செய்தார். இந்நிலையில், கொளத்தூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
நிலை கண்காணிப்பு குழு அதிகாரி, குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பரப்புரையின்போது தேர்தல் நடத்தை விதிகளை விஜய் மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 5 ஒலிபெருக்கிகளை வைத்து மட்டுமெ பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியிருக்கிறார்.
பரப்புரை தொடங்கிய முதல் நாளே இப்படி வழக்கு வாங்கியிருக்கிறார் விஜய். முன்னதாக வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய முயன்றபோது, கூட்ட நெரிசல் அதிகமானதால், பரப்புரை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications