லாக்டவுன் நீடிக்கும் வரை அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவளிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாக்டவுன் நீடிக்கும் வரை தமிழக அரசின் அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு அளிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தினகரன் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

TTV Dhinakaran appeals on Amma Canteens

ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்களில் நேற்றுவரை விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவுக்கு இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சரியானதல்ல. வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஏழை,எளிய மக்கள் இதனால் பசியால் வாடும் நிலை ஏற்படும்.

TTV Dhinakaran appeals on Amma Canteens

எனவே, ஊரடங்கு நீடிக்கும் வரை அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் அனைவருக்கும் கட்டணமின்றி உணவளிக்க வேண்டும். குறைந்தபட்சம் கொரோனாவின் பாதிப்பு குறையாத சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலாவது இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்திட வேண்டும்.

TTV Dhinakaran appeals on Amma Canteens

இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+