தமிழக தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் தொ.பரமசிவன்: தினகரன் புகழஞ்சலி
சென்னை: தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர் பேராசிரியர் தொ. பரமசிவன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவர் முனைவர் தொ.ப. என்கிற பேராசிரியர் தொ. பரமசிவன். பாளையங்கோட்டையில் உடல்நலக் குறைவால் இன்று இரவு தொ.ப. காலமானார்.

தொ.பரமசிவனின் மறைவு உலகத் தமிழ்ச் சமூகத்துக்கு மிகப் பெரிய பேரிழப்பு... ஈடு செய்யவே முடியாதது. தமிழர் பண்பாட்டின் அடிவேர்களை தேடித் தேடி தமிழ் மக்களுக்கு வழங்கியவர். தமிழ்நிலத்தின் தொன்மையை வாழ்வியல் கூறுகளினூடே வரலாற்று ஆவணமாக நூல்களின் வழி ஆவணப்படுத்திய பேராளர் தொ.பரமசிவன்.
தொ.ப.வின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், படைப்பாளிகள் என பலரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல்:
தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 24, 2020
தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர்.
இவை தொடர்பாக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த தகவல்களும், எழுதிய நூல்களும் என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications