இப்படியே போனால் எப்படி? அடுத்த ப்ளான் என்ன? ஜூன் 7ஆம் தேதி அமமுக செயற்குழுவை கூட்டும் டிடிவி தினகரன்
சென்னை: ஜூன் 7ஆம் தேதி சென்னையில் அமமுக செயற்குழு கூட்டத்தை அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பிறகு இந்த செயற்குழு நடைபெறவுள்ளதால் அது குறித்தும் எதிர்கால கட்சியின் பாதை குறித்தும் விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.

அதேபோல் அமமுகவிலிருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக என படையெடுத்து வருவதால், கட்சி மாறும் படலத்தை தடுத்த நிறுத்துவது பற்றியும் செயற்குழுவில் தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூரில் மிக எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமமுக கட்சியானது முக்கியப் பிரமுகர்களின் விலகலால் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செயற்குழு தொடர்பாக டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 07.06.2023 புதன் கிழமை அன்று காலை 09.00 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications