செம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன?
தினகரனை சிறையில் உள்ள சசிகலா சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறையில் அவரை சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சந்தேகத்தையும், பரபரப்பையும் எழுப்பி உள்ளது.
என்ன ஆனாலும் அதிமுகவை விட்டுவிடக்கூடாது என்பதுதான் சசிகலாவின் இறுதிவரையான குறிக்கோளாக இருந்தது. ஆனால் அமமுக என்ற புது கட்சியை ஆரம்பித்தது... தினகரனின் நடவடிக்கை, யாரையும் அரவணைத்து செல்லும் பாங்கு இல்லாதது, கட்சி நிர்வாகிகளின் யார் பேச்சையும் காது கொடுத்து கேளாதது போன்றவையே அவரது சறுக்கல்களுக்கும் காரணமாகி விட்டது.
இதனால் சசிகலா தினகரன் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் தேர்தல் ரிசல்ட்டும் பாதகமாக வந்துவிடவும், சசிகலாவின் கோபம் உக்கிரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

சொத்து விவகாரம்
இதனிடையே, விவேக், அனுராதா, திவாகரன் போன்ற குடும்ப நபர்கள், சொத்து விவகாரம் முதல் அரசியல் விவகாரம்வரை புகார்களை சசிகலாவிடம் கொண்டு செல்லவும், தினகரனுடனான நெருக்கம் குறைய தொடங்கிவிட்டதாக தகவல்கள் கசிந்தன.

மறுப்பு
இந்நிலையில்தான், சசிகலாவை இன்று பகல் 12 மணிக்கு சிறையில் சென்று சந்திப்பதாக தினகரன் பிளான் போட்டிருந்தார். அதன்படி, பெங்களூர் சிறை முன்பும் காத்திருந்தார். ஆனால் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சசிகலாவை சிறையில் சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன்.

நீண்ட இடைவெளி
2017, ஏப்ரல் மாதமும் இப்படிதான் நடந்தது. இரட்டை இலையை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் செல்வாக்குமிக்கவர் என்று கூறப்படும் இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் சிக்கிய சமயம் அது. அந்த நேரத்தில் சிறையில் சசிகலாவை பார்க்க தினகரன் சென்றபோதும், சசிகலா அவரை பார்க்காமலேயே திருப்பி அனுப்பினார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், தினகரனை திருப்பி அனுப்பி உள்ளார்.

உறவில் விரிசல்?
சிறைதரப்பில் தினகரனை திருப்பி அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்காது. ஒருவேளை சசிகலாவே தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பியிருப்பாரோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், பெங்களூர் வரை சென்று, சசிகலாவை பார்க்காமலேயே தினகரன் திரும்பி உள்ளது அமமுகவுக்கு பெரிய சறுக்கலை தந்துள்ளதுடன், தினகரன் - சசிகலா உறவிலும் விரிசலை அதிகப்படுத்தி உள்ளதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications