கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினார்.. அமமுகவிலிருந்து வி.பி. கலைராஜன் நீக்கம்.. தினகரன் நடவடிக்கை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி. கலைராஜன். இவர் கட்சியில் அதிக ''வாய்ஸ்'' உள்ள நபர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இந்த நிலையில் இவர் திடீர் என்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வி.பி. கலைராஜனை நீக்குவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அவர் கட்சியின் மாண்பிற்கு களங்கம் விளைவித்துவிட்டார். கட்சியை பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் இனி தொடர்பு கொள்ள கூடாது, என்று டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
விபி கலைராஜன் வகித்து வந்த பொறுப்புக்கு வி. சுகுமார் பாபு நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விபி கலைராஜன் திமுகவில் இணைவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்தது, இதையடுத்துதான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications