உடன் பிறந்த தம்பியை கொடூரமாக சுட்டுக் கொன்ற தூத்துக்குடி பில்லா ஜெகன்.. திமுகவிலிருந்து சஸ்பெண்ட்
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்த பில்லா ஜெகன், விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கிறார். லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனிடம், தம்பி சிம்சன் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். குடும்ப விவகாரத்திலும் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறக்க தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தம்பி சிம்சன் தொடையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரத்தம் அதிகமாக வெளியேறியது. நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் சிம்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கியால் சுட்ட பில்லா ஜெகன், தப்பியோடி திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்தார். அவரை திருவனந்தபுரம் சென்று கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க விதிகளை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். திமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசியதாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் கூறி, தி.மு.க., விலிருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications