சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்யாணத்திற்கு முன்பே ஹேமந்துடன் குடித்தனம்?.. விவரமாக பிளான் செய்த சித்ரா?.. பகீர் கிளப்பும் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: திருமணம் செய்து கொள்ளாமலேயே சித்ராவும் ஹேமந்த்தும் ஒரே அறையில் குடித்தனம் நடத்தியதாக பகீர் தகவலை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சித்ரா, ஹேமந்த் யார், அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதும் அவரது மரண வழக்கிற்கு உதவும் என்பதால் அவர்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி சித்ராவுக்கு குடிபழக்கம், சிகரெட், கஞ்சா மற்றும் டேட்டிங் பழக்க வழக்கங்கள் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வரும் நிலையில் அதை விட பகீர் கிளப்பும் தகவல் ஒன்றை சித்ரா வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சித்ரா மரண வழக்கில் மாஜிக்களை இழுத்து விட்ட ஹேமந்த்.. ஆளை விடுப்பானு டீல் பேசும் மாஜி அமைச்சர்? சித்ரா மரண வழக்கில் மாஜிக்களை இழுத்து விட்ட ஹேமந்த்.. ஆளை விடுப்பானு டீல் பேசும் மாஜி அமைச்சர்?

சித்ரா மரணம்

சித்ரா மரணம்

ஹேமந்த் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களின் பெயர்களை சொல்லாமல் தலைமறைவு ஆட்டம் ஆடி வருகிறாரோ அப்போதிலிருந்து சித்ரா வழக்கு சூடுபிடித்துள்ளது. அந்த ஓய்வு பெற்ற போலீஸார் அதிகாரி கூறுகையில், சித்ராவும் ஹேமந்த்தும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி ஒரு சான்றிதழை காட்டினார் ஹேமந்த்.

போலி சான்றிதழ்

போலி சான்றிதழ்

அந்த சான்றிதழில் கூறிய விலாசம் பொய். பின்னர் அவரிடம் கேட்ட போது தான் தாங்கள் சூளைமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டோம் என கூறி ஒரு விலாசத்தை கொடுத்தார். அந்த விலாசத்திற்கு சென்றால் அப்படிப்பட்ட ஹோட்டலே இல்லை. பின்னர் மேலும் விசாரித்த போதுதான் ரூ 15 ஆயிரம் லஞ்சம் கொடுத்து போலியாக பதிவு சான்றிதழ் வாங்கியது தெரியவந்தது.

சித்ராவும் உடந்தை

சித்ராவும் உடந்தை

இதற்கெல்லாம் சித்ராவும் உடந்தையாக இருந்த போதிலும் இந்த விதிமீறல்களுக்கு ஏன் அவர் சம்மதித்தார் என்றால் அதன் பின்னர் பல பகீர் காரணங்கள் உள்ளன. அதாவது சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததோடு அரசியல் பெரும்புள்ளிகளுடன் தொடர்பும் இருந்தது. இது பெற்றோருக்கும் தனது குடும்பத்தினருக்கும் தெரிய கூடாது என்பதற்காக சித்ரா, தனியாக வருவதற்காக ஹேமந்துடனான காதலை பயன்படுத்தி கொண்டார்.

ஹேமந்த் போதை பழக்கம்

ஹேமந்த் போதை பழக்கம்

இதனால் ஹேமந்துடன் வெளியே தங்கினார். தனியாக வீடு எடுத்தும் தங்கி திருமணத்திற்கு முன்னரே இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்தனர். ஹேமந்திற்கும் போதை பழக்கம் இருந்ததால் அவர் பெண்களின் தொடர்பு இல்லாமல் இருக்க மாட்டார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

11 பெண்களுடன் உல்லாசம்

11 பெண்களுடன் உல்லாசம்

சித்ரா இறந்த பின்னர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவர் 11 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்றால் அவருடைய உடல் தேவை எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் சித்ராவை தனது உடல் தேவைக்கும் பண தேவைக்கும் ஹேமந்த் பயன்படுத்திக் கொண்டார்.

பணத்தாசை

பணத்தாசை

இதையடுத்து நாளடைவில் மேலும் பணத்தாசையாலும் வேறு பெண்களுடன் பழக சித்ரா இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்றும் அவரை அரசியல் புள்ளிகள் சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்வது, அவர்களுடன் பண பேச்சு நடத்துவது உள்ளிட்ட காரியங்களை செய்வது, போதை பொருளை தங்கு தடையின்றி சித்ராவுக்கும் அவருக்கு தேவையானவர்களுக்கும் சப்ளை செய்வது என இருந்தார். அதாவது சித்ராவுக்கு ஏஜென்ட்டாகவே இருந்தார் ஹேமந்த் என்றார் அந்த அதிகாரி.

English summary
Retired Police officer says about why TV Serial actress Chithra and Hemanth stayed before marriage?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X