இரவோடு இரவாக தவெக நிர்வாகி கைது.. 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் அதிரடி கைது!
சென்னை: சென்னை ஆர்.கே. நகரில் சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் வீட்டிற்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டிய தவெக நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தேர்தல் களம் இப்போது தான் ஓய்ந்து இருக்கிறது. கடந்த இரு மாதங்களாகவே மாநிலத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இப்போது சற்று அமைதி திரும்பியிருக்கிறது.

இதற்கிடையே சென்னை ஆர்கே நகரில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்கே நகர் 43வது வார்டு தவெக வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டிற்கு வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, அதை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் சிறுமியிடம் தினேஷ் அத்துமீறியது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும், திங்கள்கிழமை வாக்கு எண்ணும் பணிகளில் தினேஷ் ஈடுபட்டிருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது அவரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications