நல்லகண்ணு உடல்நிலை.. பனையூரில் இருந்து பறந்த போன் கால்.. நலம் விசாரித்த விஜய்
சென்னை: தவெக தலைவர் விஜய், நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார். நல்லகண்ணுவின் பேரனுடன் தொலைபேசி வாயிலாக பேசிய விஜய், அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் தீவிர சிசிக்சை பெற்று வருகிறார்.

நல்லகண்ணு கடந்த 22 ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
மேலும், 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று இரவு நல்லகண்ணு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தினமும் நலம் விசாரித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து அவரின் பேரனிடம் நலம் விசாரித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் நலம் விசாரித்தார். அப்போது அவர் நலமாக உள்தாக மருத்துவர்கள் கூறினார்.












Click it and Unblock the Notifications