பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டி
சென்னை: திமுக அணியில் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் தாம் போட்டியிடுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
Recommended Video
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து பண்ருட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் வேல்முருகன் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்டு பண்ருட்டி தொகுதி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. இதனிடையே சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றி இருக்கிறேன். எங்கள் கட்சியின் முதல் சட்டசபை உறுப்பினராக நான் இருக்க வேண்டும் என ஒப்புதல் தந்துள்ளனர். இதனடிப்படையில் பண்ருட்டியில் தாம் இம்முறை போட்டியிடுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications