பூரண மதுவிலக்கு ஒன்றே குறிக்கோள்! பாமகவுடன் கைகோர்க்கத் தயார்! வேல்முருகன் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: பூரண மதுவிலக்கு ஒன்றே குறிக்கோள் என்றும் இதற்காக பாமக உட்பட எந்தக் கட்சியோடும் இணைந்து செயலாற்றத் தாம் தயார் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மதுவில்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கள்ளச்சாராயமோ, நல்ல சாராயமோ மொத்தத்தில் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு எனவும் கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு, கூட்டணிக்கும், மதுவிலக்குக்கும் சம்பந்தமில்லை என பளிச் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் ஒரு சொட்டு கூட மது இருக்கக் கூடாது என்பதே தனது கட்சியின் நிலைப்பாடு என்பதால் இதற்காக அதிமுக, பாமக, நாம் தமிழர், என எந்தக் கட்சியுடனும் இணையத் தயார் என ஓபனாக அறிவித்துள்ளார்.
ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாமகவிலிருந்து விலகிய வேல்முருகன் தனியாக கட்சி தொடங்கி நடத்தி வரும் நிலையில், முதல்முறையாக பாமகவுடன் இணைந்து செயல்படத் தயார் என அவர் அறிவித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
வட தமிழ்நாட்டில் ராமதாசும், வேல்முருகனும் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து செயலாற்றினால் அது அரசியல் களத்தில் திருப்பு முனையாக அமையக்கூடும்.
திமுக கூட்டணியில் வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்து வருவது பல்வேறு நிகழ்வுகளின் மூலம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம், சட்டசபையில் பேச வாய்ப்பு மறுப்பு, என்.எல்.சி., மதுவிலக்கு என பல விவகாரங்களில் திமுக அரசு எடுக்கும் முடிவுக்கு முரணாக நின்று எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார் வேல்முருகன்.












Click it and Unblock the Notifications