திமுக அஸ்திவாரத்தை ஆட்டிய தவெக! வாழ்த்துகளால் திணறும் விஜய் வீடு! நீலாங்கரையில் 2 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வருவதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில், அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்க ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் அங்கு திரண்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட நிலவரங்கள் வெளியானது முதலே தமிழக அரசியல் களம் பெரும் அதிர்வலைகளைச் சந்தித்து வருகிறது.

திமுக மூத்த அமைச்சர்கள்
குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட மூத்த அமைச்சர்கள் பலரே பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாகவே தங்கள் தொகுதிகளில் அசைக்க முடியாத சக்திகளாக இருந்த அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தமிழக அரசியலில் புதிய வரவாக களமிறங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தவெக ஆச்சரியம் வாக்கு வங்கி
தவெக பெற்று வரும் வாக்குகள் ஒட்டுமொத்த தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு அக்கட்சிக்கு அமோகமாக இருப்பதை தற்போதைய தேர்தல் நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக உருவெடுத்துள்ள விதம், தேர்தல் களத்தின் போக்கையே மாற்றி அமைத்திருக்கிறது.
இந்தத் தேர்தல் எழுச்சியால் உற்சாகமடைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், அதிகாலை முதலே கட்சியின் தலைவர் விஜய் வீட்டின் முன்பு குவியத் தொடங்கியுள்ளனர்.

சென்னை நீலாங்கரை
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வருவதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில், அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துத் தெரிவிக்க ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் அங்கு திரண்டு வருகின்றனர்.
மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் முன்புறம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் மூத்த அமைச்சர்களின் சறுக்கல் ஒருபுறமும், விஜய்யின் தவெக ஏற்படுத்தி வரும் புதிய திருப்பம் மறுபுறமும் எனத் தமிழக அரசியல் வரலாறு காணாத மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் காணப்படுகிறது.

இப்போதைய சூழலில், நீலாங்கரைப் பகுதி முழுவதும் தவெக தொண்டர்களின் உற்சாகக் குரல்களால் அதிர்ந்து வருகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு நேரடியாக வந்து பாதுகாப்பு நிலவரங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.,.!












Click it and Unblock the Notifications