சீமான் Vs வேல்முருகன்: யார் மாஸ் கூட்டத்தை கூட்டியது? வென்றது திருச்சியா? மதுரையா? பரபர விவாதம்!
சென்னை: தமிழ் தேசிய அரசியல் பேசும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இருவரும் நேற்று மதுரை மற்றும் திருச்சியில் நடத்திய பொதுக் கூட்டங்களில் யாருக்கு கூட்டம் அதிகம் என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.

பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பண்ருட்டி வேல்முருகன் 2012-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கினார். திராவிடர் இயக்கம், பாமக உள்ளிட்ட கட்சிகளின் மேடைகளில் பேச்சாளராக இருந்த சீமான் 2010-ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். வேல்முருகன், சீமான் இருவரும் தமிழ்த் தேசிய அரசியல், ஈழப் பிரச்சனை என அனைத்திலும் ஒரே கொள்கை, கோட்பாடு கொண்டவர்கள். தாம் கட்சியை தொடங்கும் போது வேல்முருகனை தலைமை ஏற்க கேட்டுக் கொண்டதாக சீமானே சில பேட்டிகளில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

வேல்முருகன், சீமான்: அதேநேரத்தில் வேல்முருகன், சீமான் இருவரும் தனித்தனி அரசியல் பாதைகளில் பயணிக்கின்றனர். தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது. சீமானைப் பொறுத்தவரையில் யாருடனும் கூட்டணி இல்லை; 31 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது இலக்கு என்கிறார் சீமான். அதேநேரத்தில் பல செய்தியாளர் சந்திப்புகளில் சீமான், வேல்முருகன் கட்சிகள் கூட்டணிகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படும். இந்த கேள்விக்கான பதிலை இருதரப்பும் மவுனமாக அல்லது புதிராக கடந்து செல்வதும் வழக்கமாக இருக்கிறது.

மாவீரர் நாள் நிகழ்வுகள்: இந்நிலையில் ஈழ விடுதலைக்குப் போராடி உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கட்சி மாநாடுகள் போல நடத்தி இருந்தனர் சீமான், வேல்முருகன் இருவரும். மதுரையில் வேல்முருகனும் திருச்சியில் சீமானும் இந்த நிகழ்வுகளை நடத்தி இருந்தனர்.

மதுரை, திருச்சி: லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழ் தேசியம் பேசுகிற சீமான், வேல்முருகன் இருவரும் மிகப் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தி இருந்தனர். வடதமிழ்நாட்டு கட்சி என அடையாளப்படுத்தப்பட்டாலும் தம்மை தமிழ்நாடு தழுவிய ஒரு கட்சியாக செயல்பாடுகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் வேல்முருகன். இதன் ஒரு பகுதியாக மதுரையில் மாவீரர் நாள் நிகழ்வை பெருந்திரளாக கட்சியினரை அணிதிரட்டி நடத்தினார். இதேபோல சீமானை ஒரு பகுதி கட்சியாக சுருக்க முடியாத நிலையில் திருச்சியில் மாநிலம் முழுவதும் இருந்தும் கட்சியினரை ஒன்று திரட்டி தமது செல்வாக்கை காட்டி இருந்தார்.

யார் மாஸ்?: இப்போது சமூக வலைதளங்களில் மாஸ் காட்டியது சீமானா? வேல்முருகனா? என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. இருதரப்புமே இவ்வளவு பெரிய கூட்டத்தை 'பென்னம் பெரிய' 'பெத்த பெத்த' கட்சிகள்தான் கூட்ட முடியும்; ஆனால் என்றேனும் ஒருகாலம் கூட்டணி அமைக்க சாத்தியம் இருக்கும் சீமானும் வேல்முருகனும் தனித்தனியே தங்களது பலத்தை காட்டி இருப்பது அந்த பெரிய அரசியல் கட்சிகளையும் கூட திரும்பிப் பார்க்க வைக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications