பொங்கல் பரிசு தொகை ரூ.3000 தியேட்டர்களில் வீணாகப்போகுதா? முக்கியமான குரலை எழுப்பிய வேல்முருகன்
சென்னை: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு, திரையரங்குகளில் வீணாகுமா? என்றும் ரசிகர் மன்றங்களின் பெயரில், ஏழை மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறதா? என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படுவதைக் கண்டித்துள்ளார் வேல்முருகன்.
எந்த நடிகரின் படமாக இருந்தாலும், எந்தத் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், திரையரங்கிற்குள் மட்டுமல்ல, வெளியிலும் ரசிகர் மன்றம் என்ற பெயரிலும், சிறப்பு காட்சி என்ற போர்வையிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி ஒரு ரூபாய் கூட பெற அனுமதிக்க கூடாது என தமிழக அரசை வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த காலங்களில் திரைப்படம் ஏழை மக்களின் வாழ்வில், சில மணிநேரப் பொழுதுபோக்குக்கான கலைப்படைப்பாக இருந்தது. இன்று அதே திரைப்படம், மக்களின் கண்ணீரை விலைப்பட்டியலாக்கும் கொடூர வணிகமாக மாற்றப்பட்டுள்ளது.
ரசிகர் என்ற பெயரில் உணர்ச்சியைத் தூண்டி, ஆர்வம் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மதிக்காமல், ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் அதற்கும் மேலான விலை வைத்து டிக்கெட்டுகளை விற்கும் வணிக மோசடி நடைபெறுகிறது. இது வெறும் வணிகமல்ல. ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமை மீது நடத்தப்படும் பகல் கொள்ளை.
ஒரு நடிகரின் புகழும், ஒரு திரைப்படத்தின் ஆரவாரமும், மக்களின் வறுமையைக் காசாக்கும் விதமாகவே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் உழைத்து வாழ்க்கையை நடத்திச் செல்லும் சாதாரண மக்கள், ஒரு படம் பார்க்கவே கடன் வாங்க வேண்டிய நிலை, இந்த மண்ணில் உருவாகியிருக்கிறது.
எந்த நடிகரின் படமாக இருந்தாலும், எந்தத் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், திரையரங்கிற்குள் மட்டுமல்ல, வெளியிலும் ரசிகர் மன்றம் என்ற பெயரிலும், சிறப்பு காட்சி என்ற போர்வையிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி ஒரு ரூபாய் கூட பெற அனுமதிக்க கூடாது.
மக்களின் உணர்வை பணமாக மாற்றும் இந்த திரைப்படக் கொள்ளைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் பணம் குவிக்கும் சந்தை அல்ல. உரிமையோடு வாழ வேண்டியவர்கள். மக்களைச் சுரண்டும் இந்த அநியாய வணிகத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் சமூக அவலத்தை, தமிழ்நாடு அரசு கண்டும் காணாமல் மௌனமாக இருந்தால், அந்த மௌனம் கூட மக்களுக்கு எதிரானதே ஆகும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திரையரங்குகளுக்கும், ரசிகர் மன்றங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா? என்பதனைக் கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications