என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தி தவெக விஜய் களம் காண்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் உளறி கொட்டியதை பாயின்டாக பிடித்த சிபிஐ வீரபாண்டியன் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், "இந்த தேர்தலில் தமிழகத்திற்கும், ஒன்றிய அரசின் அதிகார குவியலற்கும் இடையே நடக்கும் அதிகார போர். இதில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களுடன் அணி சேருவோர் தோற்கடிக்க வேண்டும். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் வெல்வோம்.

மதச்சார்பின்மை பூமி
பல திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையும் மக்களிடம் சென்றுள்ளது. நாங்கள் நிச்சயம் வெல்வோம். தமிழ் மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. மதவாதத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழ் பூமி பண்பட்ட கலச்சார பூமி. இங்கு மத வழிபாடுகளுக்கு இடமுள்ளது. அறிவியலுடன் பண்பட்ட கலாச்சாரம் இங்குள்ளது. இதை சிதைப்பதற்கு பாஜக நினைக்கிறது. மதுரை மக்கள் பாஜகவிற்கு உரிய பாடத்தை வழங்கியுள்ளனர். உலகத்தில் வேறு எங்குமில்லாளவுக்கு மதச்சார்பின்மை இங்குள்ளது.
மீண்டும் ஸ்டாலின்
அதை பாஜக வீழ்த்த நினைக்கிறது. அதனால் நாங்கள் பாஜக மற்றும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்த நினைக்கிறோம். தமிழ் பண்பாட்டு விழுமியங்களை முன்னெடுக்க விரும்புகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார். எங்கள் அறிவிப்புகளை அமல்படுத்த திமுகவிடம் வலியுறுத்துவோம். இந்தியாவின் பன்முகம் என்பது ஒட்டுப்போடப்பட்டது என்று பிரதமர் சொல்கிறார்.
விஜய் மீது நடவடிக்கை
அதை கேட்க சொல்லுங்கள். சுயேச்சை நின்றாலும் ஜனநாயகத்தில் மதிப்போம். விஜய் பொருட்டல்ல என்று நாங்கள் கூற மாட்டோம். பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அப்பட்டமான செயல். இது ஜனநாயகத்தை சிதைக்கும். வாக்காளர்களை பணம் வாங்க சொன்ன விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்?












Click it and Unblock the Notifications