அணுக முடியாத இடத்தில் விஜய்.. தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் செய்யும் அரசியல்.. என்ன நடக்கிறது?
சென்னை: தவெக தலைவர் விஜய்யை சுற்றில் இருப்பவர்கள் தனியாக ஒரு அரசியலை மேற்கொண்டு வருவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய்யை யாரும் அணுக முடியாத அளவிற்கு கொண்டு சென்றுவிட்டதாகவும், புதிதாக வருவோர் தங்களின் இடத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதால், யாரையும் கட்சியில் சேர்க்கவும் முயற்சிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் யாரும் வருத்தமோ, மன்னிப்போ இதுவரை கேட்கவில்லை. 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்யும், சிஎம் சார்.. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..

நான் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன்.. ஆனால் அவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. கரூர் மக்களை விரைவில் சென்று சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் பேச்சில் கொஞ்சம் கூட பொறுப்போற்றுக் கொண்டதை போல் இல்லை என்றும், மீண்டும் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதற்கேற்ப தவெக நிர்வாகிகளும் கரூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் எண்ணத்தில் கூட இல்லை என்று கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்பான ஆலோசனையில் இருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனா சோசியல் மீடியா மூலமாக தவெகவினரை கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விஜய் தவெகவின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பேச்சை மட்டுமே கேட்பதாக கூறப்படுகிறது. தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களான அருண் ராஜ், ராஜ் மோகன் உள்ளிட்டோர் என்ன ஆனார்கள் என்பதே அக்கட்சியினருக்கு கூட தெரியவில்லை. விஜய்யின் இரங்கல் பதிவுகளையும், வீடியோக்களையும் மட்டுமே தங்கள் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே விஜய்யை சுற்றி இருப்பவர்கள் தனியாக அரசியல் செய்து வருவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் யாரும் அணுகும் இடத்தில் விஜய் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவின் செய்தி தொடர்பாளராகவும், ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியுமான மருது அழகுராஜ் தவெகவில் இணையவே விரும்பி இருந்தார்.
விஜய் தொடர்பாக பல்வேறு நேர்காணல்களிலும் புகழ்ந்து வந்தார். ஆனால் திடீரென திமுகவில் ஐக்கியமானார். இதன் பின்னணி தொடர்பாக விசாரிக்கையில் தவெக தலைவர் விஜய்யை அணுக முடியவில்லை என்றும், விஜய்யை சுற்றில் இருப்பவர்கள் புதிதாக யாரையும் அவருக்கு அருகில் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து அரசியல் செய்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications