சென்னையில் சொந்த வீடு.. கனவை நிஜமாக்கும் TVS எமரால்டு ஏட்ரியம்! ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்தா போதும்
சென்னை: ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவு. அந்த கனவை நனவாக்கி கொடுக்கும் பணியை TVS நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ள எமரால்டு நிறுவனம் செய்துவருகிறது. இங்கு உள்ள 2 & 3 BHK வீடுகள் 57 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இதில் நீங்கள் வீடுகளை பெற மொத்த தொகையும் உடனே செலுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. தற்போது முன்தவனையாக ரூ.5 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும். உங்களுக்கான வீடுகள் உறுதி செய்யப்படும்.
சென்னை பெருங்களத்தூருக்கு அருகில் அமைந்துள்ள இந்த TVS எமரால்டு ஏட்ரியம் உங்களுக்கான கனவு வீடுகளை உங்களுக்கு ஏற்றவாறே வடிவமைத்துள்ளது.
'TVS எமரால்டு ஏட்ரியம்'
கடந்த 1911ல் உருவாக்கப்பட்டு தற்போது இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உள்ள TVS நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் 'TVS எமரால்டு ஏட்ரியம்'. இந்நிறுவனம் தற்போது உலகத் தரத்திலான குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை பெருங்களத்தூருக்கு புதிய குடியிருப்பை உருவாக்கி வருகிறது. இந்த குடியிருப்புக்கள் 2025ல் முழுமையாக கட்டி முடிக்கப்படும். ஆனால் உங்களுக்கான வீடுகளை நீங்கள் 2024க்கு முன்னரே உறுதி செய்துகொள்ளலாம்.

அடுக்குமாடி குடியிருப்பு
சென்னை விரிவடைய தொடங்கிவிட்டது. நகர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று, ஒலி, ஒளி மாசுகளை தவிர்க்க தற்போது ஏராளமானோர் புறநகர் பகுதிகளையே அதிகம் விரும்புகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதிகளில் உங்களுக்கென தனியான ஒரு வீடு இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கனவை 'TVS எமரால்டு ஏட்ரியம்' நிஜமாக்கியுள்ளது. 2.53 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு அழகான அடுக்குமாடி குடியிருப்பை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வசதிகள்
சர்வதேச தொழில்நுட்பங்களை கொண்டு உலக தரத்தில் உருவாக்கப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தும் உள்ளன. மட்டுமல்லாது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் அமைகிறது. 10,800 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு சிறந்த சமூக உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைகிறது.
சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகள்
TVS எமரால்டு ஏட்ரியம் என்பது TVS எமரால்டின் 18-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்ட குடியிருப்பின் ஒரு அங்கம்தான். இது 8 மாடிகள் கொண்ட கட்டமைப்பில் அமைய இருக்கிறது. இதனை சுற்றி 500+ குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த TVS எமரால்டு ஏட்ரியம், பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 5 கி.மீ தொலைவிலும், வண்டலூர் சந்திப்பிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்பம்சங்கள்
மட்டுமல்லாது இந்த குடியிருப்பின் 5 கிமீ சுற்றளவில் 6 பள்ளிகள் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். இது மட்டுமா என்று கேட்கிறீர்களா? நடைப்பயிற்சி/ஜாகிங் டிராக், யோகா புல்வெளி, திறந்த ஆம்பி-தியேட்டர், கூடைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங் ரிங்க், கிரிக்கெட் மைதானம், வணிக வளாகம், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிளப்ஹவுஸ் - லவுஞ்ச், ஜிம், பல்வேறு பயன்பாட்டுக்கான ஹால்கள், மினி தியேட்டர், உட்புற விளையாட்டு பகுதி, நீச்சல் குளம் , உட்புற பூப்பந்து மைதானம் மற்றும் விருந்தினர் படுக்கையறை என பல வசதிகளை TVS எமரால்டு கிரீன் ஏக்கர்ஸில் கிடைக்கப்பெறுகிறது.
முன்பணம்
இயற்கையை ரசிப்பவரா நீங்கள் அப்படியெனில் உங்களுக்கென மூலிகை தோட்டம், வெளிப்புற உடற்பயிற்சி உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. மேலும், இது எதிர்வரும் 2025ல் முழுமையாக முடிக்கப்படும். ஆனால் உங்கள் கனவு குடியிருப்பை உறுதி செய்ய நீங்கள் 2025 வரை காத்திருக்க வேண்டி அவசியம் இல்லை. மாறாக 2024க்குள் ரூ.5 லட்சம் முன்பணம் செலுத்தி உங்களுக்காக குடியிருப்பை உறுதி செய்துகொள்ளலாம்.
நம்பிக்கை
சரி ஏன் மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதை விட TVS நிறுவனத்தின் குடியிருப்புகளை வாங்க வேண்டும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இந்த யோசனையே உங்களுக்கு வரக்கூடாது என்பதற்காகதான் இந்நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், சிறந்த வடிவமைப்பாளர்களை கொண்டு, உறுதியான பொருட்களை கொண்டு நம்பிக்கையான குடியிருப்புக்களை சரியான நேரத்தில் நாங்கள் வழங்கி வருகிறோம். இதனால் இப்படியான கேள்விகளை நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. உடனே குடியிருப்பை வாங்குவதற்கு யோசிக்க தொடங்குங்கள்.












Click it and Unblock the Notifications