சைவ ஓட்டலுக்கு வந்து.. சிக்கன் ரைஸ் கேட்டு தகராறு.. ஆயுதப்படை போலீஸாருக்கு அடி உதை.. பரபரத்த சென்னை
ஓட்டல் ஊழியர்களும் பொதுமக்களும் சேர்ந்து கொண்டதை அடுத்து, காவலர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
சென்னை: சென்னையில் சைவ ஓட்டலுக்கு வந்து சிக்கன் ரைஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸாரை ஓட்டல் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடிகளை போல மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்ட காவலர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வலயுறுத்தி வருகின்றனர்.

காவல்துறைக்கு இழுக்கு
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அல்லும் பகலும் தனது குடும்பத்தை மறந்து உழைக்கும் அசாத்தியமான போலீஸார் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதே சமயத்தில், காவல்துறைக்கே இழுக்கை தேடி தரும் செயல்களில் ஈடுபடும் போலீஸாரும் இருக்கவே செய்கிறார்கள். கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இந்த சப் இன்ஸ்பெக்டர் கைது; விபச்சாரத்தில் ஈடுபட்ட காவலர் கைது என்பன போன்ற செய்திகளை பார்க்கும் போது காவல்துறை மீதான நம்பிக்கையை சிதறடிப்பதாக உள்ளது.

சைவ ஓட்டல்
சில தினங்களுக்கு முன்பு கூட சேப்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் தங்களுக்கு தேவையான பொருட்களை போலீஸார் அடாவடியாக பறித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தாம்பரத்தில் தற்போது நடந்திருக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரியில் சைவ ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு ஆயுதப்படை காவலர்கள் இருவர் கடந்த 15-ம் தேதி சென்றுள்ளனர்.

சிக்கன் ரைஸ் கேட்டு தகராறு
அப்போது அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓட்டலுக்குள் சென்ற அவர்கள் சிக்கன் ரைஸ் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள், சைவ ஓட்டலுக்கு வந்து சிக்கன் ரைஸ் கேட்கிறீர்களே எனக் கூறியிருக்கின்றனர். இதனை கேட்ட ஆயுதப்படை காவலர்கள், ஓட்டல் ஊழியர்களை திட்டியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கைகலப்பு
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஓட்டல் ஊழியர்களும், காவலர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பின்னர் ஓட்டல் ஊழியர்களும் பொதுமக்களும் சேர்ந்து கொண்டதை அடுத்து, காவலர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களிடம் துறை ரதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆயுதப்படை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications