கடலூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது திடீரென அறுந்து விழுந்த விளம்பர பலகை.. அதிர்ச்சி சம்பவம்
சென்னை: கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே போக்குவரத்து சிக்னலுக்கான கம்பத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த விளம்பர பலகை திடீரென்று அறுந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது விழுந்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களுக்கான கம்பத்தில் விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளது.

அதேபோல் தான் கடலூரில் அண்ணா மேம்பாலம் அருகே போக்குவரத்து சிக்னலில் விளம்பர பலகை தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.
அப்போது திடீரென்று அந்த விளம்பர பலகை அறுந்து கீழே விழுந்தது. விளம்பர பலகை அறுந்து கீழ்நோக்கி வந்தபோது சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றார். அவர் மீது அந்த விளம்பர பலகை பொத்தென விழுந்தது. இதனால் அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அந்த நபர் காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் இருந்து விளம்பர பலகை அறுந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது விழுந்தது அருகே உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications