ரெட் கலர் சுடிதார்.. பார்க்க படு ஸ்மார்ட்.. ஆனால் செய்த வேலையை பாருங்கள்!
நகை திருடிய 2 இளம்பெண்களை பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர்
Recommended Video
சென்னை: சுடிதார் அணிந்த இந்த இரு இளம்பெண்களை பார்க்கவே படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள்.. இவர்களா இந்த காரியத்தை எல்லாம் செய்தது என்று நினைத்தால் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பீமண்ணா கார்டன் முதலி தெருவில் 2 இளம் பெண்கள் இன்று சுற்றி திரிந்துள்ளனர். ஒருவர் மஞ்சள் கலர் சுடிதார், இன்னொருவர் ரெட் கலர் சுடிதாரில் இங்குள்ள கடைப்பகுதிக்கு வந்துள்ளனர்.

"நாங்க வெளியூர்.. அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்க நகைகளை அடகு வைக்கணும், அடகு கடை இங்கே எங்கே இருக்கு?" என்று அப்பகுதி மக்களிடம் கேட்டுள்ளனர்.
அடகு கடை ஏதுமில்லை என்று அங்கிருந்தோர் சொல்லி உள்ளனர். ஆனால் அந்த பெண்களோ, கையில் நகைகளை எடுத்து காட்டி, "அப்படின்னா, இந்த நகைகளை வாங்கிக்கிட்டு, நீங்களே ஒரு தொகையை தாங்களேன்" என்று கேட்டுள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் அபிராமபுரம் போலீசுக்கு தகவல் தந்தனர்.
போலீசாரும் விரைந்து சென்று, அந்த பெண்களை ஸ்டேஷன்அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது இருவரும், ஈரோடு மாவட்டம் பள்ளி பாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி, நந்தினி என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ஐந்து கொலுசுகள், செயின்கள் ஆகியவை போலி என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 2 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications