படிக்கும் போதே வேலைக்கு சேர பயிற்சி.. பள்ளி மாணவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சொன்ன குட் நியூஸ்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் திறனை வளர்க்கும் பிரத்யேக பயிற்சி வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தால் மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் தொழில் திறனையும் வளர்த்துக் கொள்வதால் அவர்களால் சுலபமாக தனியார் துறையில் பணியமர முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், இந்தியாவுக்கும் இடையேயான தொடர்பை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கும் கணிசமானது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் தற்போது அதிக அளவில் உள்ளன. தொழிற்சாலைகள் முதல் ஐடி நிறுவனங்கள் வரை அங்கு புதிது புதிதாக தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இது நல்ல விஷயம் தான் என்றாலும், தனியார் துறையில் பணி செய்வதற்கு ஏற்ற திறமையான பணியாளர்கள் கிடைப்பதில்லை. அங்கு பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடரும்பட்சத்தில், எதிர்காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பிக் ஃபோர் தொழில்முறை சேவை நிறுவனமான KPMG இன் சமீபத்திய அறிக்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏற்கனவே தங்கள் தொழில் இலக்குகளில் கவனம் செலுத்துவதாகக் காட்டுகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் சுமார் 40% பேர் பல்கலைக்கழகத்தில் வணிகம் அல்லது சுகாதாரம் பற்றி படிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.
மைண்ட் தி கேப்' என அழைக்கப்படும் இந்த அறிக்கை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 78 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஆய்வு செய்தது. எதிர்கால வேலை வெற்றிக்கான தகவல் தொடர்பு, விமர்சன சிந்தனை, படைப்பாற்றல், சமூக திறன்கள் மற்றும் தலைமைத்துவம் போன்ற திறன்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சியை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்தை ஓரிரு நாட்களில் செயல்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வரை இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 3,500 மாணவர்களுக்கு ஓராண்டு வரை இந்த தொழில்திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு பல்வேறு தனியார் துறைகளில் இருக்கும் பணிகளின் அடிப்படை பயிற்சி, சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காணும் பயிற்சி உள்ளிட்டவை இந்த திட்டத்தில் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் தொழில் திறனையும் வளர்த்துக் கொள்வதால் அவர்களால் சுலபமாக தனியார் துறையில் பணியமர முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications