கல்வி தான் யாராலும் அழிக்கவே முடியாத ஆயுதம்! ஒரு லேப்டாப் இருந்தாலே உலகம் உங்கள் கையில்.!- உதயநிதி
சென்னை: அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றார். மேலும், படிக்காமல் வென்றவர்கள் சிலர் தான் என்றும் படிப்பால் வென்றவர்களே இங்கு பல லட்சம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. "உலகம் உங்கள் கையில்" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார். பெரியார் தொலைநோக்குப் பார்வையில் அன்று சொன்னவை, இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளாகி உள்ளன என்ற உதயநிதி, அப்போதே வீடியோ கால் குறித்து பெரியார் பேசியிருந்தார் என்றும் அவை தான் இப்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் ஐடி துறைக்கே அடித்தளமிட்டவர் கருணாநிதி என்றும் உதயநிதி தெரிவித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் நிச்சயம் பயன் தருபவையாக இருக்கும் என்றும் உதயநிதி தெரிவித்தார். மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஸ்பேஸ்எக்ஸ் என உட்பட உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொடங்கியது ஒரு லேப்டாப்பில் தான் என்றும் ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
கல்வி தான் யாராலும் திருட முடியாத, அழிக்க முடியாத ஆயுதம் என்ற அவர், படிப்பு இல்லாமல் வென்றவர்கள் 100 பேர் என்றால், படிப்பால் வென்றவர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றும் பேசினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications