கோபாலபுரத்துக்காரன் நான்.. தோற்று போன "ஆழ்வார்பேட்டை" அரசியல்.. யாரை சொல்கிறார் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் கோபாலபுரத்தை பற்றி பெருமையுடன் பேசினார்
சென்னை: "ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து விட்டனர்.. ஆனால் என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும், நான் பிறந்தது எல்லாமே கோபாலபுரம் தான்... எப்பவுமே நான் கோபாலபுரத்துக்காரன்தான்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு நவம்பர் 27ம் தேதி அதாவது நாளைய தினம் பிறந்த நாள்.
ஆனால், தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

கனமழை
அதில், "கொரோனா பெருந்தொற்று, கனமழை என தொடர் பாதிப்புகளில் இருந்து திமுக அரசின் உதவியுடன் மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது.
ஆகவே எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களில் அறவே தவிர்க்க வேண்டும்..

பிறந்த நாள்
இது போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையும் என்றால் அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது... மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்புகளை சரி செய்வதிலும் உடன்பிறப்புகள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.

கல்வி உதவித்தொகை
இதையடுத்து, திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை எளிமையுடன் அதே சமயம் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.. அதுபோல, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.. இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி கலந்து கொண்டார்.. 1,200 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகையையும் வழங்கினார்.

கோபாலபுலம்
அப்போது பேசிய உதயநிதி, "ஆழ்வார்பேட்டையில் இருந்து நான் ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதாக முன்பு பேசியவர் சொன்னார்... அதில் ஒன்றும் தவறில்லையே... ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து விட்டனர்.... ஆனால் என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும், நான் பிறந்தது எல்லாமே கோபாலபுரம் தான்... எப்பவுமே நான் கோபாலபுரத்துக்காரன்தான்.. கருணாநிதியின் பேரன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

முதல்வர்
இந்தியாவில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் இருப்பதில் பெருமையில்லை, ஆனால், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்" என்றார். ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து விட்டனர் என்று உதயநிதி சொல்வது யாரை? ஒருவேளை "அவராக' இருக்குமோ என்ற சந்தேகங்கள் பரபரத்து வருகின்றன.
-
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications