Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் பணக்காரர்களின் நீச்சல் குளங்களால்.. தண்ணீருக்கு அல்லோலப்படும் ஏழைகள்.. ஆய்வில் ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் செல்வந்தர்கள் தங்கள் நீச்சல் குளங்களுக்கு பயன்படுத்தும் நீரால் ஏழை மக்கள் குடிநீர் வசதி இன்றி தவிக்கும் நிலை இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வு வெளியாகியுள்ளது.

பருவநிலை மாறுபாடு காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம்.. இதனால், போதிய அளவு மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுவது.. நிலத்தடி நீரை அளவுக்கதிமாக பயன்படுத்துவது என தண்ணீர் பஞ்சம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மூன்றாம் உலகப் போர் ஒன்று ஏற்படுமேயானால் அது குடிநீருக்காகத்தான் இருக்கும் என்ற எச்சரிக்கையும் நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. நீரின்றி அமையாது உலகு என வள்ளுவன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறினாலும் நீரின் முக்கியத்துவத்தை பற்றி இன்னும் கூட மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Under previlieged people in cities facing Drought by swimming pools of Rich People

கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தண்ணீருக்கு அல்லோலப்படும் மக்களை நம் நாட்டிலும் கூட காண முடிகிறது. எதிர்காலத்தில் ஏற்பட போகும் மிகப்பெரும் தண்ணீர் நெருக்கடிக்கு இது ஒரு அபாய ஒலியாகத்தான் இதை கருதமுடியும். தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து ஒருபக்கம் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வந்தாலும் மற்றொரு பக்கம் தண்ணீர் வீணடிப்புகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில், பெரும் செல்வந்தர்கள் தங்கள் நீச்சல் குளங்களுக்கு பயன்படுத்தும் நீரால் ஏழை மக்கள் குடிநீர் வசதி இன்றி தவிக்கும் நிலை இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வு வெளியாகியுள்ளது. ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வு நேச்சர் சஸ்டெய்னபிலிட்டி என்ற இதழில் வெளியாகி இருக்கிறது.

Under previlieged people in cities facing Drought by swimming pools of Rich People

அந்த அறிக்கையின் படி, நகரங்களில் பெரும் பணக்காரர்கள் தங்கள் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவது... தண்ணீர் அதிகம் பாய்ச்சப்படும் அழகு பசுமை தோட்டங்கள், மற்றும் கார்களை சுத்தப்படுத்த நீர் பயன்படுத்துவது போன்றவையால் தண்ணீர் நெருக்கடி ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிகராக பணக்காரர்களின் இந்த பயன்பாட்டால் தண்ணீர் நெருக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் அதிக வறட்சியை எதிர்கொண்டு வருவதாக 80 பெரு நகரங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. இதில், மியாமி, ஆஸ்திரேலியாவின் மெல்ர்போன், இங்கிலாந்தின் லண்டன், சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன். சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளது. வறட்சி மற்றும் நிலையில்லாத நீர் பயன்பாடு ஆகியவற்றால் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கூறிய நகரங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+