Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார் ஓட்டல் லிப்ட்டில் தொழிலதிபரிடம் நெருங்கிய பெண்.. என்னாது ரூ.10 கோடியா? ஆடிப்போன மும்பை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வசதி படைத்த தொழிலதிபர் ஒருவர், தன்னுடைய செல்ல மகனுக்கு சமீபத்தில் திருமணம் செய்தார்.. இந்த திருமணத்துக்காக உறவினர்களுக்கு, ஸ்டார் ஓட்டல் ஒன்றில் விருந்தும் வைத்தார்.. அப்போது லிப்ட்டில் நடந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. என்ன நடந்தது ?

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் கோயல்.. இவரது மகன் பெயர் ரித்தம்.. இவருக்கு யஷஷ்வி என்ற பெண்ணுடன் கடந்த நவம்பர் 5-ம் தேதி கல்யாணம் நடந்தது..

Star Hotel lift rs10 crore Mumbai

குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த இந்த கல்யாணம் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. கல்யாணத்துக்கு பிறகு, நவம்பர் 14-ந்தேதி, அம்போலி பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் ரித்தம் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்து தந்தார்.. அந்த விருந்தில் நண்பர்கள் அனைவரும் பங்கேற்று ஜாலியாக இருந்தனர்..

ஸ்டார் ஓட்டல் லிப்ட்

விருந்து முடிந்த பிறகு, ரித்தம், யஷஷ்வி மற்றும் அவரது தம்பி 3 பேரும் ஓட்டல் லிப்ட்டில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது லிப்ட்டில் இன்னொரு பெண் ஏறினார்.. திடீரென, அந்த பெண் ரித்தம் தன்னிடம் லிப்ட்டில் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

லிப்ட் தரைதளத்துக்கு வந்ததுமே கத்தி கூச்சலிட்டு சண்டை செய்தார்... இதனால் ஓட்டல் பகுதியே பரபரப்பாகிவிட்டது.. இந்த விஷயம் போலீஸ் வரை சென்றது.. அம்போலி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பெண், இன்னொரு பெண்ணை அழைத்து கொண்டு, தொழிலதிபர் அரவிந்த் கோயலை சந்தித்து பேசினார்கள்..

மும்பை தொழிலதிபர்

வழக்கை நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்க்க வேண்டுமானால், தங்களுக்கு ரூ.10 கோடி வேண்டும் என்றும், அப்படி கொடுக்காவிட்டால் புதிதாக திருமணமான மகன் ரித்தல் மீது பாலியல் புகார்களை கூறி, அவரை வாழ்நாள் முழுக்க ஜெயிலில் தள்ளிவிடுவதாகவும் மிரட்டினார்கள்.. இதனால் தொழிலதிபர் அரவிந்த் கோயல் அதிர்ந்து போனார்.. தன் மீது வீண்பழி சொல்வதுடன், தன்னுடைய மகன் மீதும பாலியல் புகாரா? தன்னை போல் யாரும் இந்த பெண்களிடம் சிக்கிவிடக்கூடாது என்றும் முடிவு செய்து, அந்த பெண்களுக்கு 5.5 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார்..

பிறகு உடனடியாக, இந்த 2 பெண்களும் தன்னை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று போலீசிலும் புகார் ஒன்றையும் தந்துவிட்டார் அரவிந்த் கோயல்.. இதனால் போலீசார் அந்த 2 பெண்களையும் கைது செய்ய முடிவு செய்தனர்.. இதற்காக பணம் தருவதாக சொல்லி, அப்பெண்களை வரவழைக்கும்படி தொழிலதிபர் அரவிந்த் கோயலிடம் சொன்னார்கள்..

ரூ.10 கோடி - பெண்

அதன்படியே அரவிந்த் கோயலும் அப்பெண்களை லோயர் பரேல் பகுதிக்கு வந்து பணத்தை பெற்று கொண்டு செல்லுமாறு அழைத்தார்... அடுத்த சில நிமிடங்களில் 2 பெண்களும் பணத்தை பெற வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார், ஹேம்லதா பேன் (39) மற்றும் அம்ரினா பெர்னாண்டஸ் (33) ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்..

இந்த விவகாரத்தில் இன்னொரு நபர் உத்கர்ஷ் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இப்போது கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்து சென்று, சிறையில் தள்ளும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+