சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீல் சேரில் உட்கார்ந்து.. அப்படியே ரவுண்டடித்து சிரித்த எச். வசந்தகுமார்.. இரக்கமே இல்லாத 2020..!

மறக்க முடியாத நபர் வசந்த் & கோ வசந்தகுமார்

Google Oneindia Tamil News

சென்னை: வீல் சேரில் உட்கார்ந்தபடியே ஒரு ரவுண்டு அடித்து திரும்பி பார்த்து சிரிக்கும் எம்பி வசந்த்குமார் நம்மையெல்லாம் விட்டு பிரிந்த வருடம் இது.. அரசியல்வாதிகளிலேயே வித்தியாசமான, அதிசயமான இந்த நபரின் பிரிவு நம்மால் இன்றளவும் மறக்க முடியவில்லை.

எளிமை + புன்னகை = இதுதான் வசந்தகுமார்.. இவர் கோபப்பட்டு, டென்ஷன் ஆகி யாருமே பார்த்திருக்க முடியாது.. 38 வருஷத்துக்கு முன்பு தன் நண்பரால் வாடகைக்கு தரப்பட்ட மளிகைக்கடையை வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடையாக மாற்றியவர்.. ஆனால், இவரது அயராத உழைப்பால், இந்த கிளைகள் 64 கிளைகளுடன் பிரிந்து கிடக்கின்றது!

Unforgettable 2020: H Vasantha Kumar was a Different Politician

தொழிலில் வெற்றி பெற்ற வசந்தகுமார், அரசியலையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த 10 வருஷத்துக்கு முன்பு அதிலும் இறங்கி களம் கண்டார்.. நாங்குநேரி தொகுதி மக்களின் பிடித்தமானவரானார்.. கன்னியாகுமரியில் எம்பியாக நின்று வெற்றி பெற்றது முதல் இப்போதுவரை இவருக்கு ஆதரவாளர்கள் இன்னமும் உண்டு.

இதைதவிர, 'வெற்றிப் படிக்கட்டு' என்ற தலைப்பில் வசந்த் தொலைக்காட்சியில் உரையாற்றி வந்தது பெரிதும் வரவேற்பை பெற்றது... வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாகவும், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி அமைத்துக்கொள்ளும் விதமாகவும் அவரது எளிய உரை எல்லோர் மனசிலும் எளிதாக பதிந்தது.

ஸ்டாலின் புலம்ப ஆரம்பிச்சிட்டார்.. வாழ்க்கை பூராவும் கனவு காண வேண்டியதுதான்.. கடம்பூர் ராஜு அட்டாக்ஸ்டாலின் புலம்ப ஆரம்பிச்சிட்டார்.. வாழ்க்கை பூராவும் கனவு காண வேண்டியதுதான்.. கடம்பூர் ராஜு அட்டாக்

"இங்கு எதுவும் சுலபம் இல்லை... சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து ஒவ்வொன்றையும் படிப்படியாகதான் பிளான் செய்ய வேண்டும்.. ஏதாவது தடைகள் வந்தால், அதை தகர்க்க போராடுவதற்கு பதில், செல்லும் திசையை மாற்றி முன்னேறி செல்ல வேண்டும்" என்ற சூட்சுமம்தான் இவரது தாரக வார்த்தைகள்.

வசந்தகுமார் அடிப்படையிலேயே ரொம்ப நாணயமானவர்.. எளிமையானவர்.. எந்தவித பந்தாவும் இவரிடம் இருக்காது. எப்போதுமே அந்த சிரிப்புதான் இவரது ஸ்பெஷல்.. யாரையுமே நோகடித்து பேச மாட்டார்.. அரசியல் ரீதியாகவும் யாரையும் சரமாரியாகவும், காட்டமாகவும் விமர்சித்ததுகூட இல்லை.. சுருக்கமாக சொன்னால், இவர் ஒரு அதிசய வெள்ளந்தி.. ஒரு மனினுக்கு அயராது உழைப்பும், நம்பிக்கையும், நாணயமும் இருந்தால், நிச்சயம் வாழ்வின் உச்சத்தை தொட்டுவிடக்கூடும் என்பதற்கு உதாரணமே வசந்தகுமார்தான்!

English summary
Unforgettable 2020: H Vasantha Kumar was a Different Politician
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X