Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ஸ்அப்பில் திடீரென வந்த மெசேஜ்! குழம்பிப் போன அதிகாரிகள்.. மேயர் பிரியா பெயரில் புதுவித மோசடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேயர் படத்தை வாட்ஸ்-அப்பில் வைத்து மோசடி முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நவீன உலகத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சைபர் குற்றங்களில் மிகவும் குறைந்த குற்றங்கள் மட்டுமே புகார் அளிக்கப்படுகிறது. அதுவே மிரளச் செய்யும் அளவுக்கு உள்ளது.

 சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்களின் உண்மையான அளவு நம்மை மலைக்கச் செய்துவிடும். இதனிடையே தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்களை ப்ரொபைல் ஃபோட்டோக்களாக வைத்துக் கொண்டு, நூதன முறையில் பண மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது. முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்கள் இருப்பதால் முதலில் இதைப் பலரும் நம்பிவிடுகின்றனர்.

 சென்னை மேயர்

சென்னை மேயர்

அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் சில மெசேஞ்கள் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டு இருந்தது. மேயர் பிரியாவின் படத்தை ப்ரொபைல் ஃபோட்டோவாக இருந்ததால், அதிகாரிகள் பலரும் அது மேயரிடம் இருந்து வந்த மெசேஜ் என்று நினைத்தே பதில் கூறி வந்தனர்.

 சந்தேகம்

சந்தேகம்

முதலில் நிர்வாக ரீதியாக சில கேள்விகள் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வாட்ஸ்-அப், ஜி பே போன்ற செயலிகள் மூலம் உடனே பணம் அனுப்ப வேண்டும் எனக் கேட்டு மெசேஜ் வந்துள்ளது. இதைப் பார்த்ததும் மண்டல அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மேயரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்துத் தெரியப்படுத்தி உள்ளனர்.

 புகார்

புகார்

அப்போது தான் இந்த மோசடி முயற்சி தெரிய வந்துள்ளது. பெரியமேடு காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேயர் பிரியா புகார் அளித்துள்ளார். இது மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து மேயர் படத்துடன் போலியாக மெசேஜ் அனுப்பி, பண மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

மேலும் இதுபோல பணம் கேட்டு வரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இதுபோன்ற நூதன மோசடி முயற்சிகள் அரங்கேறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே வேலூர், திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களில் மோசடி அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+