சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533 கோடி செலவு செய்த பாஜக.. தமிழுக்கு இவ்வளவு தானா.. ஆர்டிஐ மூலமாக அம்பலம்!
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமைகளை பேசி வருவதாக பாஜகவினர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533.59 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருத வளர்ச்சி ரூ.230.24 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.

அதேபோல் மற்ற 5 இந்திய செம்மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ரூ.13.41 கோடி செலவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன்பின் 2005ஆம் ஆண்டு சமஸ்கிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமஸ்கிருதத்தை விடவும் 22 மடங்கு தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கன்னடம், ஒடியா, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு 2008 முதல் 2014 வரை செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இந்த 4 மொழிகளுக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.34.08 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் 5 செம்மொழிகளுக்கும் சேர்த்து ரூ.147 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5 மொழிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி என்று பதிவிட்டுள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications