Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் வீட்டிற்கு பக்கத்திலேயே.. வீடு பார்த்த அமித் ஷா.. தமிழ்நாட்டிற்கு ஷிப்ட் ஆகிறார்! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருக்கும் பனையூர் நீலாங்கரை வீட்டிற்கு அருகிலேயே அமித் ஷா வீடு பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே ஏற்கனவே அவர் ஒரு வீட்டை பார்த்துள்ளதாகவும், விரைவில் அந்த வீட்டிற்கு "தற்காலிகமாக" அவர் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தமிழகத்திற்கான பாஜகவின் வியூகம் தொடர்பாக, அவர் வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

tamilnadu Election 2026 2026 tamil nadu amit shah

சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு

அமித் ஷா தங்குவதற்கு வசதியான ஒரு இல்லத்தைத் தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. கிண்டி, அடையார் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் அவருக்கான தற்காலிக குடியிருப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சில பாஜக மூத்த தலைவர்கள் நேரடியாக இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடைசியில் தீவிர சோதனைக்கு பின் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருக்கும் பனையூர் நீலாங்கரை வீட்டிற்கு அருகிலேயே அமித் ஷா வீடு பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமித் ஷா டிசம்பர் 15 அன்று தமிழகம் வரவுள்ளார். அவர் சென்னை - வேலூர் செல்லும் வழியில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விரிவாக்கம் குறித்த முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

அமித் ஷா போட்ட சபதம்

சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற மாநகராட்சி நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 2014 மக்களவைத் தேர்தல் முதல் 2025 வரை தமிழ்நாட்டில் பாஜக தொடர்ச்சியான வளர்ச்சியைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"மம்தா பானர்ஜியும் ஸ்டாலினும் தயாராக இருக்க வேண்டும். பீகாருக்குப் பிறகு, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வின் நேரம் இது. பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை," என்று அவர் கூறினார். திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுகவைக் குறிப்பிட்டு, "தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் அவர்கள் அடியோடு துடைத்தெறியப்படுவார்கள்," என அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழ்நாடு வரும் அமித் ஷா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்குவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. அதன்படி, அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் ஆன பிறகும், இதுவரை வேறு எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவில்லை.

இதற்கிடையே, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றன. அந்தக் கூட்டங்களில், கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கூட்டணிக் குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், கூட்டணி விரிவாக்கம் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் யார் இணையலாம் என்பதைத் தானே முடிவு செய்வேன் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் குறித்து பாஜகவிடம் அவர் சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணியில் யார் இணையலாம்

கூட்டணியில் யார் இணையலாம் என்பதை அதிமுகவே முடிவு செய்யும் என்றும், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் இருந்தால் போதும் என்றும் எடப்பாடி பழனிசாமி நயினாரிடம் வலியுறுத்தியுள்ளார். வேறு கட்சிகளைக் கொண்டு வர பாஜக முயற்சி செய்யத் தேவையில்லை என்றும், அதிமுகவே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக எந்தெந்த கட்சி கூட்டணியில் வரலாம் என்பதை முடிவு செய்யக்கூடாது என்றும், அதிமுகதான் அதற்கான முடிவை எடுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். வேண்டுமானால், இடஒதுக்கீடு (சீட் பங்கீடு) பேச்சுவார்த்தைகளில் அதிமுகவுடன் பாஜக இணையலாம், ஆனால், கூட்டணிக்கு யார் வரலாம் என்பதை பாஜக முடிவு செய்யக்கூடாது என்றார். எவ்வளவு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதையும் அதிமுகவே முடிவு செய்யும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல, தமிழக வெற்றி கழகம் (த.வெ.க)வை கூட்டணிக்குள் கொண்டு வர நடிகர் விஜய் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தார். அப்போது பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளை நயினார் நாகேந்திரன் அமித் ஷாவிடம் வழங்கி உள்ளார். முன்னதாக, அமித் ஷா கடந்த இரு வாரங்களாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அண்ணாமலை ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது, டிசம்பர் 30 அல்லது ஜனவரி முதல் வாரம் அன்று அவர் தமிழகம் வரும்போது, மாநில பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணியின் விரிவாக்கம் குறித்து விரிவாகப் பேசுவார் எனத் தெரிகிறது.

அமித் ஷாவின் இந்த வருகையின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் அறிவிப்பு வெளியாகலாம். ஏற்கனவே, அமமுக, பாமக மற்றும் சில கட்சிகள் திமுகவுக்கு எதிரான கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இக்கட்சிகள் அதிமுக - பாஜக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+