தமிழ்நாடு அமைச்சர்களை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக துபாய் தமிழ் சங்க தலைவர்.. பல்வேறு கோரிக்கை!
சென்னை: ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் துபாயின் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் தமிழ்நாடு மாநில அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
ஐக்கிய அரபு அமீரக துபாய் தமிழ் சங்கமானது துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஒன்றினைக்கும் விதமாகவும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இந்த தமிழ் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகள், பணிகளை மேற்கொண்டு கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வந்த ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் துபாயின் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் பல்வேறு தமிழ்நாடு அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் குறிப்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், உலகத்தமிழர் நல்வாழ்வு துறை அமைச்சர் மஸ்தான், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அமைச்சர்களுடனான சந்திப்பு பற்றி அவர் நம்மிடம் கூறியதாவது, உலகத்தமிழர்களுக்கான நலன்கள் குறித்தும் அவர்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆலோசனை செய்தோம். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் பேசினோம்.
உலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அரசு உதவும் என்றும் அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கூறினர்.மேலும் அமைச்சர்களுடனான இந்த சந்திப்பு மனநிறைவை அளித்தது, என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் துபாயின் பொதுசெயலாளர் ஹேமாலட்சுமியும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications